7/5/09

நாகரீக பிச்சைக்காரன்

பேருந்து நிறுத்தத்தில்
சார் ...
பசிக்குது சார் ..
என் கால்களை இழுத்தப்படி
இளந்தளிரின் குரல்
இதயத்தில்
நெக இடுக்கில் ஊசி
குத்தியது போல் வலி ...
மனம் குமறியது
'நானும் உன் போல்
பிச்சைக்காரன் தான்'
'நீயோ தட்டுடன்
நானோ பட்டத்துடன் '

க.கோபி தி.கோடு ....

No comments:

Post a Comment